
![]() | |||||||||||||
| |||||||||||||
|
உங்களின் அமானுஷ்யக் கேள்விகளுக்கு அதிசய பதில் அளிக்க உள்ளேன். ஈமெயில்-muhamedsaleem@gmail.com (படங்கள்,வீடியோ,உண்மைசம்பவம் இணைத்து அனுப்பலாம்)
![]() | |||||||||||||
| |||||||||||||
|
எளிய முறை குண்டலினி
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம். காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.
மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள். அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ, பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி, செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு, முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.
ஆக்கினை சக்கரம்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.
அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.
ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.
தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.
ரீகி, Dr. Mikao usui என்பவரால் 18 ம் நூற்றாண்டின் கடைசியில் கண்டுப்பிடிக்கப்பட்டது. ரீகி என்றால் “பிரபஞ்ச உயிர்சக்தி” என்று பொருள். ரீகி சக்தி மிகுவும் சக்தி வாய்ந்தது.சக்தி வாய்ந்த ஒரு சுய சிகிச்சை முறை. இதை பண்ணணினால் உடனே முழு மன அமதி, உடல் தளர்வு, எல்லாம் கிடைக்கும்.
ரீகியை எப்படி கற்றுக்கொள்வது ?
ரீகி மாஸ்டர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு உண்மையைச் சொல்லுகிறேன். அன்புடன் கையை வையுங்கள் வியாதி சரியாகிவிடும். அழும் குழந்தைக்கு அம்மா தட்டிக்கொடுப்பதும், நமக்கு வயிற்று வலி என்றவுடன் தானாக கைகள் சென்று அந்த இடத்தில் வைக்கிறோம். வலி போய்விடுகிறது.அன்பு தான் இன்ப ஊற்று. அன்பு உள்ளம் வேண்டும். கலியுகத்திற்கு மனித சமுதாயத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட பெரிய பொக்கிஷம் இந்த ரீகி. ஆனால் இது மிகவும் சுலபமாக இருப்பதால் மக்கள் அதை நம்ப மறுக்கிறார்கள். இந்து மத தத்துவங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்தால் அதில் சொல்லப்பட்டது எல்லாம் ரீகி தான்.
பிரானிக் எனும் புதிய சிகிச்சை முறை
உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ரிஷிகள் பிராண சக்தியை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தினார்கள். பண்டைய முறையின் அடிப்படை, இன்றைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றி வடிவமைக்கப்பட்டது பிரானிக் ஹீலிங் (Pranic Healing) என்ற இந்தப் புதிய சிகிச்சை முறை.
டாக்டர்கள் கைவிட்ட நோயாளிகளையும் பிரானிக் ஹீலிங் முறையில் எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.
பக்கவாத நோயாளிகள் வாரம் இரண்டு நபர் பிரானிக் ஹீலிங் சிகிச்சை எடுத்துக் கொண்டால்கூட விரைந்து குணமாகிவிடுவார்களாம்.
நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போக்கிரட்டீஸ் கூட நம்முடைய உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் சக்தி படைத்தது என்று கூறியுள்ளார். உடலில் நோயால் பாதிப்படைந்துள்ள பகுதிக்குப் பிராண சக்தியை அளித்தால் போதும். விரைந்து குணமாகிவிடலாம்.
எப்படி சிகிச்சை அளிக்கின்றனர்?
நம் உடலைச் சுற்றி ஐந்து அங்குலம் வரை ஆரா (Aura) எனப்படும் ஒளி வட்டம் காணப்படுகிறது. இது ஆரோக்கியக் கவசமாக இருந்து நம் உடலில் நோய் தோன்றுவதற்கு மூன்று மாதம் முன்பே இந்த ஒளி வட்டக்கவசம் பாதிக்கப்படுகிறது. ரஷ்ய விஞ்ஞானி கிரிலான் என்பவர் இந்த ஒளி வட்டத்தைப் படமாகக்கூட எடுத்துக்காட்டியுள்ளார்.
எனவே, நோயாளியைத் தொடாமலேயே பிரானிக் ஹீலர் இந்த ஒளி வட்டத்திற்குச் சிகிச்சை அளித்துக் குணப்படுத்துவார்.
மூட்டுவலி, சர்க்கரை நோய், இதய நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், மனக்கோளாறு, மூச்சுக் கோளாறுகள் முதலியவற்றைச் சிரமமின்றி எளிதில் குணப்படுத்திக் கொள்ளலாம். நாட்பட்ட நோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொள்பவர் பிரானிக் சிகிச்சை எடுத்துக்கொண்டால் ஐந்து மடங்கு வேகத்தில் விரைந்து குணமாவார். பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சை இது.
தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளப் பத்து நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து வெளிவரும் மூச்சு வழியாக தன் நோயை வெளியே தள்ளுவது போல் மனக்கண்ணால் பார்த்தால் போதும். எந்த அளவு நல்லெண்ணத்துடன் நோய்ப்பட்ட சக்தியை விடா முயற்சியுடன் கழிவுகளாக வெளியே தள்ளுவதுபோல காட்சியாகப் பார்கிறோமோ அந்த அளவுக்கு விரைந்து குணமாகிவிடுவோம்.
நம் குடும்ப உறுப்பினர்களுக்கு அவர்கள் உடலைத் தொடாமலேயே நம் உள்ளங்கைகளை நோயுள்ள பகுதியில் காட்ட வேண்டும். நம் கையிலிருந்து செல்லும் சக்தி அவர்கள் உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளை, அவர்கள் மூச்சை வெளியே தள்ளுவது போலக் கற்பனை செய்தால் போதும், நல்ல பலன் கிடைக்கும்.
இதில் பயிற்சி பெறப்பெற நோயாளியைப் பார்த்தவுடனேயே உடலைச் சுற்றியுள்ள ஒளி வட்டத்தில் எங்கே கோளாறு என்பதை நோயாளியின் உடலைத் தொடாமலேயே வெறும் கைகளால் ஸ்கேன் செய்து எளிதில் சிகிச்சை அளித்துவிடலாம்.
தியானம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள் தினமும் தங்கள் உடலில் உள்ள கெடுதலான பொருட்கள் உருண்டு திரண்டு சாம்பல் நிறத்தில் தங்கள் மூச்சு வழியாக வெளியேறுவதாக கற்பனை செய்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலைச் சுற்றியுள்ள ஆரோக்கிய கவசம் பாதுகாப்பாக இருக்கும்.
| |||||||
|
Air
காற்று நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இது நன்கு வீட்டினுள் வர ஜன்னல்களைத்திறந்து வையுங்கள். குறிப்பாக, படுக்கை அறையில்… பாதுகாப்பையும் பார்த்துக்கொள்ளுங்கள்.
Breathe
நன்கு ஆழ்ந்து சுவாசியுங்கள். குறிப்பாகக் காலையில் ஆழ்ந்து மூச்சுப் பயிற்சிசெய்யவும். இளமையைப் புதுப்பிக்கும் எளிய வழி இது.
Chill
கடும் குளிரும் கடுமையான வெப்பமும் இடர்களை உண்டாக்கும். முடிந்தவரைஇவையிரண்டையும் தவிர்த்து, அன்றாட வாழ்வை ஒழுங்குபடுத்தி வாழுங்கள்.
Dwell
தூய்மையான இடத்தில் வாழுங்கள். அசுத்தமான வீடுகளில் வசிப்பதால் உடல் நலத்திற்கு எளிதில் தீங்கு உண்டாகும்.
Eat
வாழ்வதற்காக உணவு உண்ணுங்கள். உண்பதற்காக வாழ்பவர்கள் மிகுந்தசிரமத்திற்குள்ளாவார்கள்.
Fly
ஈக்களும் பிற பூச்சியினங்களும் தூய்மையைக் கெடுக்கும். கொசுக்கள் நோய்நுண்மங்களை காற்றில் பரப்பும். இந்த இரண்டும் உங்கள் வீட்டில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Getup
அதிகாலையில் எழுந்துவிடுங்கள். இதனால் ஒவ்வொரு நாளையும் சிறப்பாக ஆர்வத்துடன் தொடங்கி வாழலாம்.
Herbs
உடலுக்கு நன்கு ஊட்டம் தரத்தக்கவை மூலிகைகள், பழங்கள், காய்கறிகள். அதாவதுஇயற்கை உணவுவையே உட்கொள்ளுங்கள். செயற்கை உணவைத் தவிருங்கள்.
Illness
பெரும்பாலும் கவனமின்மையால்தான் நோய்கள் தாக்குகின்றன. ஆறுமாதத்திற்கு ஒருமுறை மருத்துவ செக்கப் செய்து கொள்வது நல்லது.
Jogging
காலையோ அல்லது மாலையோ மெல்லோட்டம் செல்வது உடற்கட்டை நன்கு பராமரிக்க உதவும். (மெல்லோட்ட நேரம் : 30 நிமிடங்கள்)
Keep
உலகில் அனைத்து நன்மைகளையும் தரக்கூடியது தூய்மை. தினமும் குளியுங்கள்.தூய்மையான ஆடைகளையே எப்போதும் அணியுங்கள். சுத்தமாக வாழுங்கள்.
Laugh
மகிழ்ச்சியாக வாழுங்கள். கஷ்டங்களின் போது தன்னம்பிக்கையுடன் மனம்விட்டுச்சிரியுங்கள். சிரிப்பு கஷ்டங்களைத் துரத்தும்.
Meditate
ஆழ்ந்து சிந்தித்து வெல்லவும், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும்தவறாமல் தியானம் செய்யவும்.
Nicotine
ஒரு போதும் புகைபிடிக்காதீர்கள். சிகரெட்டினால் ஒரு சிறு நன்மையும் இல்லை.வலிந்து நச்சு வலையில் விழாதீர்கள்.
Overweight
அதிக எடை ஏறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான உணவு, உடற்பயிற்சிமுதலியவற்றால் உடல் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மாரடைப்பைத்தவிருங்கள்.
Province no meat
இறைச்சி உணவுகள் உங்கள் உணவுத்தட்டில் இடம் பெறவே கூடாது. இவை நஞ்சு மிகுந்த உணவுகள்.
Quietness
ஒரு நாளில் இருபது நிமிடங்களாவது பரபரப்பு இல்லாமல் அமைதியாகவும் ஓய்வாகவும் இருங்கள். இதனால் நரம்புமண்டலம் சிறப்பாக இயங்க போதுமான அளவு ஓய்வும் இணக்கமும் நரம்புகளுக்கு கிடைக்கின்றன.
Resist
மனம் அமைதியாக இருந்தால் உடல் ஆரோக்கியம் எப்போதும் சீராக இருக்கும்.எப்போதும் நேர்மையான செயல்களை மட்டுமே கவனமாகச் செய்து வந்தால் மனம் எப்போதும் அமைதியாக இருக்கும். குறுக்கு வழிகள் தான் மன அமைதியைக் கெடுக்கின்றன.
Think
நம்மிடம் உள்ள செல்வத்தைவிட உயர்ந்தது நமது உடல்நலம்தான். எனவே, உங்கள் உடல்நலம் பற்றி சிந்தித்து அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப வாழுங்கள்.
Ulcer
மதுபானங்கள் அருந்தாதீர்கள். கவலைப்படாதீர்கள். இரண்டும் வயிற்றில் புண்களைஉண்டாக்கும்.
Value
மருத்துவ ஆலோசனைகளின் மதிப்பை உணர்ந்தால், அவற்றைப் பின்பற்றினால் எல்லாவிதமான நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
Wisdom
உண்மையான அறிவு நமக்குத் தேவை. இதுவும், ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கை முறையும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள உதவும்.
X-Ray
உங்களுக்குத் தெரியாமல் இருக்கும் பிரச்னைகளையும் நோய்களையும் எக்ஸ்ரேயும்,உங்களின் இரத்தம், சிறுநீர் போன்ற பரிசோதனைச்சாலை முடிவுகளும் தெள்ளத்தெளிவாக வெளியே காண்பித்தருளும். எனவே, இதுபோன்ற நவீன பரிசோதனைகளைத் தவிர்க்காதீர்கள்.
You are
உங்கள் வேலைகளுக்குச் சமமாக தூங்கும் நேரமும் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். கடின உழைப்புத் தேவை. அதற்காக அடிப்படை ஓய்வைத் தவிர்க்கவேண்டாம்.
உடல்நலத்தில் அக்கறை கொள்ளாவிடில் எதையும் செய்யாத ‘பிறந்தோம் வாழ்ந்தோம்’என்ற ஒன்றுமே இல்லாத, பூஜ்யமாக நம் வாழ்க்கை முடிந்துவிடும். அதற்கு இடம்கொடுக்காதீர்கள்.வாழ்க்கை மிகவும் வெறுப்பாக இருக்கிறதா? மிகவும் சோர்ந்து போய் விட்டீர்களா? சில எளிய வழிகளால் மீண்டும் உங்களை பழைய நிலைக்கு உற்சாகமுள்ளவராக புதுப்பித்துக் கொள்ள முடியும்.
1. முதலில் உங்களுக்கு இதுவரை வந்த பாராட்டு, ஊக்கம் முதலியவற்றை நினைத்துப்பாருங்கள். பிறகு, நீங்கள் பாராட்ட நினைக்கிறவர்களுக்கு பாராட்டுக் கடிதம் எழுதுங்கள். நன்றிக் கடிதம் எழுதுங்கள். நீங்கள் அன்று சொன்ன ஒரு சொல், அல்லது உங்களின் போன வருடக்கடிதம் எனக்கு ஊக்கத்தை புதுப்பித்துள்ளது, நன்றி என்று கூறிஎழுதிப்பாருங்கள், போனிலும், நேரிலும் சொல்லத் தயங்கும் பாராட்டு, நன்றிமுதலியவற்றை கடிதங்கள் மூலம் எளிதில் சொல்லமுடியும்.
2. உடம்பை ஒருமுறை நன்கு குலுக்குங்கள். அல்லது ஒரு ஐந்து நிமிடங்கள் ஆடுங்கள். உங்கள் சக்தி அதிகரிக்க ஆரம்பிக்கும்.
3. ஐந்து நிமிடங்கள் வாய்விட்டுச் சிரியுங்கள். நகைச்சுவைக் கட்டுரை படிக்கலாம்.அல்லது நகைச்சுவைக் காட்சிகளை டி.வி.யில் அரைமணி நேரம் பாருங்கள். மன இறுக்கம் உடனே அகலும்.
4. ஒரு தலையணையை தலைக்கு வைத்துக்கொண்டு நீட்டிப்படுங்கள். இரண்டு கைகளையும் தொப்புளில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மூச்சு உள்ளே சென்று வெளியே வருவதை கற்பனையில் பாருங்கள். பிறகு கால்களை படுத்த நிலையிலேயே உயரத்தில் தூக்குங்கள். பிறகு கால் பாதங்கள் தரையில் தொட்டுக் கொண்டிருக்க இடுப்பையும், முழங்கால்கலையும் முன்னோக்கித் தூக்குங்கள். இந்த பயிற்சியை தினமும் 5 நிமிடங்கள் அல்லது 10 நிமிடங்கள் செய்தால் உங்களின் சக்தி அதிகரிக்கும்.
5. எப்போதும் தைரியமாக வாழ்க்கையை எதிர் கொள்ளுங்கள். நமது மாபெரும் பயங்களை வெல்லக்கூடிய ஒரே மாற்று மருந்து, நச்சு முறிவு மருந்து தைரியமான எண்ணங்களும், செயல்களும்தான், தைரியமான செயல் முறையால் மிகப்பெரிய சக்தி நம்முள் எழுகிறது. இதுவே படைக்கும் திறன், உடல் உறுதி, சமாளித்து வெற்றிபெற தேவையான ஆற்றல் முதலியவற்றைத் தந்து நம்மை உயர்த்துகிறது.
6. வேலை செய்யப் பிடிக்காதபோது, பதட்டமாக உள்ளபோதும் மூச்சை நன்கு இழுத்துவிடுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியால் வெறுமை நிலை ஏற்படாது. மன அமைதிகிடைக்கும்.
7. உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உங்கள் சக்திக்கு உட்பட்ட சிறு சிறு பரிசுப் பொருள், வாழ்த்து அட்டை போன்றவற்றை அனுப்புங்கள். அவர்கள் காட்டும்பிரதிபலிப்பில் குதூகலிப்பீர்கள். இது உறுதி.
8. பாதிப்பாதியாக நிறைய வேலைகள் அப்படியே உள்ளனவா? முடிக்காத வேலைகளைப் பட்டியல் எடுத்து ஒவ்வொன்றாக முடியுங்கள். இந்த ஒழுங்கு முறையை வீட்டிலும் அலுவலகத்திலும் பின்பற்றினால் உங்கள் மீது உங்களுக்கு சுயமரியாதை அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அடுத்ததைச் சந்திக்க உற்சாகமாக இருக்கும்.
9. உங்கள் உடைகளில் மாற்றம், முடிவெட்டிக் கொள்வதில் மாற்றம், வாரம் ஒரு முறை, அருகில் உள்ள இதுவரை செல்லாத ஊர்களுக்குச் சென்று வருதல் என்று உங்கள் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். உடை அணிவதில் காட்டும் இந்த மாற்றம் உங்களுக்கு அளவற்ற உற்சாகத்தைத் தரும். சுத்தமான ஆடைகளையே தினமும் அணியுங்கள்.
10. உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூன்று பொருள்களைக் குறிப்பிடுங்கள். எந்தமூன்றைக் கண்டு வெறுக்கிறீர்கள்! சிறந்த மூன்றிலிருந்து நீங்கள் உலகிற்கு கொடுத்தசிறப்பு எது? பதிலை எழுதுங்கள். வெறுக்கின்ற மூன்று அம்சங்களில் உங்களின் பயங்களும் அறியாமையுமே முதலிடத்தில் இருக்கும். எனவே, பயப்படாமல் அறிவுடன் வாழ முடிவு செய்யுங்கள்.
11. உங்களது வாழ்க்கை முறை, சத்துணவு முதலியவற்றை நன்கு ஆராயுங்கள். உங்கள் பணி, உடல் நலன் முதலியவற்றிற்கு ஏற்ப சத்துணவுத் திட்டம் தயார்படுத்திபின்பற்றுங்கள்.
12. உங்கள் உடல்நலமும், செல்வ வளமும் நன்கு இருப்பதைக் கற்பனையில் சதாபாருங்கள். உங்கள் உருவத்தை வெற்றிகரமான, ஆரோக்கியமான மனிதராகவே பாருங்கள். பொட்டாசியம், மக்னீஷியம் உள்ள பழங்களையும், பருப்பு வகைகளையும் நன்கு சேர்த்துவந்தால் நரம்பு மண்டலம் துடிப்பாகவும் அமைதியாகவும் இருந்து,சுறுசுறுப்பான வாழ்க்கையை உங்களுக்கு உருவாக்கித்தரும். வாழ்வில் சோர்வு தலைகாட்டாது.
சோர்வை நீக்கும் உணவு வகைகள்:
சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதில் சோளம், புரதம் நன்கு உள்ள உருளைக்கிழங்கு, அதிக நேரம் மன உளைச்சலுடன் வேலை பார்க்க நேரிட்டாலும் இதயம் சிறப்பாக இயங்க ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ்,சப்பாத்தி, கொண்டைக்கடலை முதலியவைகளில் உள்ள தயாமின் என்ற வைட்டமின்,ஆக்ஸிஜனை உடலின் அனைத்துச் செல்களுக்கும் அனுப்ப பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலியவைகளில் உள்ள இரும்புச்சத்து தாராளமாக உதவும். இந்த உணவுகள் அடிக்கடி உங்கள் உணவில் இடம் பெற்றால் மனமும் உடலும் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.