Monday, May 23, 2011

எதையும் சாதிக்கலாம்...


எதையும் சாதிக்கலாம்

தகுதியின் விளிம்பில் நீ தயாராக இருந்தால் வாய்ப்புகள்
உன்னிடம் வாய்ப்புக் கேட்கும். வேகத்தின் உச்சியில்
நீ விவேகத்தை அமர்த்தினால் வெற்றிகள் உன்னிடம் முத்தம் கேட்கும்.
மனிதனே எவ்வாறு விடியாத இரவொன்று கிடையாதோ
அதுபோல் நீ முயன்றால் முடியாத செயலொன்றும் இருக்காது.

வாழ்க்கையில் உங்களுக்கென்று ஓர் இலக்கு இருக்க வேண்டும்.
நீங்கள் இலக்கினை அடைய கடுமையாக உழைக்க வேண்டும்.
வெற்றிப் பயணத்திற்கு ஒரு முடிவில்லை.
உள்ளத்தில் உற்சாகமும் சாதனை வேட்கையும் இருந்து கொண்டே இருக்கும்.
ஒவ்வொரு நாளும் “இன்று புதிதாகப் பிறந்தோம்” என்ற புத்துணர்வோடு
எழுந்து மகிழ்வோடு பணிகளைத் தொடங்குங்கள்.
கழுகுக்குப் பார்வை மிகவும் கூர்மை. மிக நுட்பமான உயரப்பார்வை.
எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தரையில் கிடக்கின்ற
இரை அதன் கண்ணுக்குத் தப்புவதில்லை.
மனதைச் சிதறவிடாமல் எவனுடைய பார்வை
லட்சியத்தின் மீது இருக்கிறதோ அவன் வெற்றியைத் தனக்குச்
சொந்தமாக்கிக் கொள்கிறான்.

நண்பனே…

நீ நினைப்பதை சாதித்துக் காட்டு

உன் வாழ்வை வளப்படுத்து...