Monday, August 3, 2009

ஆழ்மனத்தின் சக்தி


அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி.அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்!!!

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும்,இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம்வரை நாம் தியானம் செய்துவரவேண்டும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவதுஎப்படி? இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக்கூறலாம்.இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா.அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடிரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடிரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)//
very impressive.

Post a Comment